கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி எதிர்ப்புறம் பழைய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 425. 40 பைசாவை கிடைக்க அரசு ஆணை தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் 425 ரூபாய் 40 பைசா எஸ்டேட் நிர்வாகம் கொடுக்க மறுத்து வருகிறது. ஆகையால் உடனே எஸ்டேட் நிர்வாகம் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று இந்த கண்டன உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு எஸ் கல்யாணி எம் எல் எஃப் மற்றும் மதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் பிரபாகரன் ஐ என் டி யு சி பொதுச் செயலாளர் மற்றும் பால்ராஜ் புதிய தமிழகம் எம் சபீர் மனிதநேய தொழிலாளர் சங்கம் காவே அன்பழகன் தீரன் தொழிற்சங்கம் ஓ எல் எஸ் பி பரமசிவம் சிஐடியு பொதுச்செயலாளர் சாமிதாஸ். டி எம் எஸ் பொதுச்செயலாளர்கள் மக்கள் நன்மைக்காக மாபெரும் உண்ணாவிரதம் இன்று பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதில் அனைத்து தொழிலாளர்களும் இந்த கொண்டார்கள்.
+ There are no comments
Add yours