டெல்லி:
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.87 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.79 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 2,82,970 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,79,01,241 ஆக உயர்ந்தது.
* புதிதாக 441 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,87,202 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,88,157 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,55,83,039ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,31,000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,961 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* குணமடைந்தோர் விகிதம் 93.88% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.83% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் 1,58,88,47,554 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,35,229 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours