சேலம் எடப்பாடியில் சாலை விபத்து! ஒருவர் பலி இருவர் பலத்த காயம்…

Estimated read time 0 min read

சேலம்;

சேலம் மாவட்டம் எடப்பாடியில் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!!

எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி பகுதியில் மூவர் இருசக்கர வாகனத்தில் கள்ளுக்கடையில் இருந்து வெள்ளரிவெள்ளி பக்கம் செல்லும்போது இவர்களுக்கு எதிரே வெள்ளரி வெளியிலிருந்து கள்ளுக்கடை நோக்கி வந்த பல்லவா மில் வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மோகன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.கூட வந்த லெனின் என்பவருக்கு தலையில் அடியும், மதிவாணன் என்பவருக்கு கால் உடைந்ததால் இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 மூலம் அனுப்பி வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்
இறந்த மோகன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால் இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours