தனியாக செல்லும் பெண்களை குறிவைக்கும் திரைப்பட உதவி இயக்குநர்.,

Estimated read time 0 min read

சென்னை;

சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திரைப்பட உதவி இயக்குநர் விஜய்பாபு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று ராமகிருஷ்ணாபுரம் தெரு வழியாக நடந்து சென்றபோது பைக்கில் வந்த நபர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து அவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் . புகாரின்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சென்னை கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குனர்கள் காலனியை சேர்ந்த விஜய்பாபு என்ற 35 வயது வாலிபர் சிக்கினார். இவர் செய்த செயல் முறையல்ல கோடம்பாக்கம் ,வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.அவரிடம் இருந்த 13 பவுன் தங்க நகைகள் , பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் போலீசார். விசாரணையில் தன்னை திரைப்பட உதவி இயக்குநர் என்று சொல்லியிருக்கும் விஜய்பாபு, சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்தபோதுதான் வழிப்பறியில் ஈடுபடும் எண்ணம் வந்தது என்று கூறியிருக்கிறார் விஜய்பாபு.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours