இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு.,

Estimated read time 0 min read

சென்னை:

தமிழகத்தில் இரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசெண்ட் திவ்யா தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று தமிழகத்தில் இரு துறைகளில் பணியாற்றி வந்த இரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலரான இறையன்பு ஐ.எஸ்.எஸ் அதிகாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி வணிகவரித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.அதேபோல வணிகவரித் துறை ஆணையராக இருந்த சித்திக் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours