புதுச்சேரியில் உள்ள சிகப்பு அட்டை தாரர்களுக்கு மழை நிவாரணமாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

Estimated read time 0 min read

புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மீனவர்கள் விவசாயிகள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் மீனவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சிகப்பு அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் மழை நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours