கடந்த ஜனவரியில் ஆம் ஆத்மி சார்பாக ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால், முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்குதலுக்குள்ளானதாகப் புகாரளித்திருக்கும் சம்பவம் ஒரு வாரமாகப் பேசுபொருளாக இருக்கிறது. இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவாலைச் சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றபோது பிபவ் குமார் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிறு, இடுப்புப் பகுதியில் தாக்கியதாகவும் போலீஸ் எஃப்.ஐ.ஆரில் ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்வாதி மாலிவால் – பிபவ் குமார்

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கும், கெஜ்ரிவால் முழுமையாக ஆராய்ந்துவிட்டு நடவடிக்கை எடுப்பார் என்று கூறியிருக்கிறார். அதேசமயம் இந்த சம்பவத்தால் ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. இதனால் ஸ்வாதி மாலிவால், நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால் இதை அரசியலாக்க வேண்டாம் என பா.ஜ.க-வுக்கு பதிலளித்தார்.

இன்னொருபக்கம், பிபவ் குமாரை கடந்த சனிக்கிழமை கைதுசெய்து ஐந்து நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்திருக்கும் டெல்லி போலீஸ், கெஜ்ரிவால் வீட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், ஸ்வாதி மாலிவால் பா.ஜ.க-வில் இணையப்போவதாக சில பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்குத் தற்போது பதிலளித்திருக்கிறார்.

ஜே.பி. நட்டா

தனியார் ஊடகத்துடனான பேட்டியில் இதுகுறித்து பேசிய நட்டா, “ஸ்வாதி மாலிவாலை இதுவரை நான் சந்தித்தது கிடையாது. அவர் பா.ஜ.க-வில் இணைவதாக எந்தவொரு முன்மொழிவும் இல்லை. ஒருவேளை அவர் பா.ஜ.க-வில் சேர விரும்பினால் பார்க்கலாம்… அவர் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. மேலும், இதுபோன்ற பேச்சுக்கள் பிரச்னையை மடைமாற்றும் வேலை” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *