அஜித் பவார் கட்சியின் மூத்த தலைவர்களான சகன் புஜ்பால் மற்றும் திலிப் வல்சே பாட்டீல் ஆகியோர் பத்திரிகையாளர் பேட்டியில், சரத் பவாருக்கு அனுதாப அலை இருப்பதாக தெரிவித்தனர். அதோடு சகன் புஜ்பால் நாசிக் தொகுதியை தனக்கு போட்டியிட கேட்டார். ஆனால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அத்தொகுதியை சகன் புஜ்பாலுக்கு கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஏக்நாத் ஷிண்டே நாசிக்கில் கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டம் எதிலும் சகன் புஜ்பால் கலந்து கொள்ளவில்லை. அதோடு பா.ஜ.க மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பாராமதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது புனேயில் சரத் பவாரை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்டுவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம் என்று பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

அஜித் பவார்

அஜித் பவார்

இந்த வீடியோவும் அஜித் பவார் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இதனால் சந்திரகாந்த் பாட்டீலை புனே பக்கம் தேர்தல் பிரசாரத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என்று பா.ஜ.க-விடம் அஜித் பவார் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவேதான் பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை ரோடுஷோ, கல்யான் பொதுக்கூட்டங்களை அஜித் பவார் தவிர்த்துவிட்டார். அதோடு பா.ஜ.க பொதுக்கூட்டம் எதிலும் கலந்து கொண்டு அஜித் பவார் பிரசாரமும் செய்ய மறுத்துவிட்டார். கடைசியாக மும்பை தாதரில் மட்டும் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் அஜித் பவார் கலந்துகொண்டார். இது போன்ற காரணங்களால் தங்களுக்கு தோல்வி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அஜித் பவார் கட்சி வேட்பாளர்கள் மூன்று பேரும் இருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *