ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் பேச ஆரம்பித்த அவர், “திருமாவளவனை போல் எனக்கு கொள்கை போராட்டத்தில் நீண்ட அனுபவம் இல்லை. இருந்தாலும் தொடர்நது பேசுகிறேன்.
நான் ஒரு கலைஞன்தான். ஆனால் என்னுடைய திறமையால் மட்டும் நான் கலைஞன் ஆகவில்லை. என்னைவிட திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். இன்னைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் என்னுடைய திறமை மட்டும் அல்ல, அது மக்களின் அன்புதான். மேடை ஏற்றிய மக்களுக்கு ஒரு பிரச்னை இருக்கும் போது, ஒரு கலைஞன் கோழை ஆகிவிட்டால் இந்த சமுதாயம் கோழை ஆகிவிடும்.
ஆகையால்தான் மன்னர் (மோடி) குறித்து பேசி வருகிறேன். இனி அவரை மன்னர் என சொல்ல முடியாது. அவர்தான் இப்போது தெய்வத்தின் குழந்தை ஆகிவிட்டாரே. இனி அவரை மனுஷனா நீ என திட்ட முடியாது. இனி தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கௌரி லங்கேஷின் தந்தை லங்கேஷ் தான் எனது ஆசான். அவர் சொன்னார், “எதிர்க்கட்சி மக்களின் நண்பனாக இருக்க வேண்டும்’ என்று. அப்படித்தான் செயல்படுகிறேன். ஜூன் 4 ம் தேதி பிறகு எனக்கு வேலை இருக்குமா என தெரியவில்லை. சிறுபான்மையினரை பாதுகாப்பது தான் பெரும்பான்மையினரின் கடமை. அம்பேத்கர் சட்டத்தை எழுதாமல் இருந்து இருந்தால் இந்த நாடு எப்படி இருந்திருக்கும் என யோசித்தால் பயமாக இருக்கிறது. ” என்றார்
மோடி குறித்து தொடர்நது பேசிய அவர், “பாசிசத்தின் சர்வாதிகாரி அவர். அவர் ஒரு புஷ்ப விமானத்தில் வருவார். மக்கள் வேலிக்கு வெளியே நிற்கிறார்கள். நின்று தான் பூ போடுகிறார்கள். அவருக்கு என்றைக்கு புரியும் நம்ம பசி. மக்களுடைய மனம் தெரியாதவர் மக்கள் வியர்வை தொடாதவர், தெய்வ மகன் இல்ல. டெஸ்டியூப் பேபி” என கடுமையாக பேசினார். .
விழாவில் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “சனாதன பயங்கரவாதிகளால் பிரகாஷ் ராஜுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் உண்டு. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொல்வேன். சனாதன பயங்கரவாதிகள் எதுவும் செய்வார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88