நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி கிராமப் பெண்கள் உட்பட பலரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்துக்கு முன்பே ஷாஜகான் ஷேக் தலைமறைவானதால், இந்தப் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது.
![சந்தேஷ்காளி (Sandeshkhali) விவகாரம் - மம்தா - ஷாஜகான் ஷேக்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F3645f3af-c989-4144-833c-715eb35c4ebb%2FUntitled_design.png?auto=format%2Ccompress)
பின்னர், மேற்கு வங்க மாநில உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால், 55 நாள்களாகத் தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை பிப்ரவரி 29-ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், ஷாஜகான் ஷேக் மீது பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு, மாநில உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.