இதையடுத்து, அனில் கோசாலியாவின் வழக்கறிஞர், ஆர்.ஜி. அஹுஜா, தனது கட்சிக்காரரின் உடல்நிலையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரால் வயது முதிர்வு மற்றும் அவருக்கு உள்ள நோய்கள் காரணமாக அவரால் அவரது தினசரி பணிகளைக்கூட தன்னிச்சையாக செய்ய முடியாது எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவரது வயது முதிர்வு மற்றும் அவருக்கு இருந்த நோய்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மட்டும் விதித்தது.
![உச்ச நீதிமன்றம் கருத்து](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-02%2Fe93f1406-c21e-4b93-a9a0-c80b5452320c%2Fjudge3_600_16_1481856397.jpg?auto=format%2Ccompress)
மேலும், அனில் கோசாலியாவின் வழக்கறிஞர் நன்னடத்தையின் பலனை வழங்கி, அவரை விடுவிக்கக் கோரினார். இதனை நிராகரித்த நீதிபதி, “இதுபோன்ற சமூக, பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றம் உரிய தண்டனையை வழங்காவிட்டால், மக்களுக்கு நீதியின்பால் உள்ள நம்பிக்கை போய்விடும் என்றும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு காட்டப்படும் அனுதாபம் சமுதாயத்தில் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட 96 வயதான அனில் கோசாலியாவை ஜாமீனிலாவது விடுவிக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அனில் கோசாலியாவை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
இவ்வழக்கில் அனில் கோசாலியாவைத் தவிர அவரது மகன், திலீப் (71), மருமகன் விமல் (58) ஆகியோருக்கும், வங்கிக் கடன் மோசடி வழக்கில், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், அவர்கள் இருவரையும் உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY