முன்னாள் எம்.எல்.ஏ-வும் எல்.ஜே.பி தேசிய பொதுச்செயலாளருமான சதீஷ் குமார்,“நாட்டில் இவ்வளவு முக்கியமான தேர்தல்கள் நடக்கும்போது, எல்.ஜே.பி தலைவரின் செயலால் கட்சி தொண்டர்கள், சிராக் பஸ்வான் வாழ்க என, இரவு, பகலாக கோஷம் எழுப்பிய மக்கள், “புதிய பீகார்’ உருவாகும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் திகைப்படைந்திருக்கிறார்கள். துரோகம் இழைக்கப்பட்டு, அவர்களின் நம்பிக்கைகள் நசுக்கப்பட்டிருக்கிறது. இப்போது, நாட்டைக் காப்பாற்ற, இந்தியக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இனி இந்தியக் கூட்டணியை உறுதியாக ஆதரிப்போம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
![வேட்பாளர்களுடன் சிராக் பாஸ்வான்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F04ffda0d-5cd6-43d4-a3cf-f5b2a10e9943%2FUntitled_design___2024_04_04T101836_947.png?auto=format%2Ccompress)
எல்.ஜே.பி கட்சியின் அமைப்பு செயலாளர் ரவீந்திர சிங்,“சிராக் பஸ்வான் பணத்துக்கு தொகுதிகளை விற்று, பீகார் மக்களின் உணர்ச்சியுடன் விளையாடியிருக்கிறார். எங்களின் கடின உழைப்பால் ஐந்து தொகுதி கிடைத்தவுடன், அந்த தொகுதிகளையெல்லாம் வெளி ஆட்களுக்கு விற்றுவிட்டார். பீகார் மக்கள் அவருக்கு பதில் சொல்வார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் என்.டி.ஏ கூட்டணியின் முக்கிய கட்சியிலிருந்து திடீரென 22 முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்திருக்கும் இந்த விவகாரம், என்.டி.ஏ கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY