புதுச்சேரி: புதுச்சேரியில் தெருவோர வியாபாரிகளுக்கான தேர்தலில் போட்டியிட, ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், 12 பேர் மனு தாக்கல் செய்தனர்.

புதுச்சேரியில் தெருவோர வியாபாரிகள், 1204 பேர் உள்ளனர். இந்த வியாபாரிகளுக்கான குழு உறுப்பினர் தேர்தல் வரும் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ளது.

இதில் புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் இருந்து மொத்தம், 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த, 18 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதில், ஏ.ஐ.டி.யூ.சி சார்பில், சங்கர், கோவிந்தன், கார்த்திக், பிரியா, சிலம்பரசன், விஜயலட்சுமி, சரவணன், ஜெசிந்தா மேரி, பழனிவேல், ராஜ்குமார், சக்தி மற்றும் ஐ.என்.டி.யூ.சி சார்பில் நாகராஜ் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை வெள்ளாளர் வீதி, சுப்பையா இல்லத்தில் இருந்து, இந்த 12 பேரும் ஊர்வலமாக புறப்பட்டு, பஜார் செயின்ட் லொராண் வீதியில் உள்ள, நகராட்சி வருவாய் அலுவலகம் வந்தனர்.

அங்கு வருவாய் பிரிவு அதிகாரி சாம்பசிவத்திடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார்.

இ.கம்யூ., பொதுச்செயலாளர் சலீம் பேரணியை துவக்கி வைத்தார்.

இதில், ஏ.ஐ.டி.யூ.சி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவத் தலைவர் அபிேஷகம் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *