இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று, 140 அடியை எட்டியது.

கேரளா மற்றும்தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை நிரம்பி வருகிறது. 125 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் முழு கொள்ளளவு 142 அடி.

தற்போது அணைக்கு வினாடிக்கு 2,050 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது.

அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லை பெரியாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *