நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறும் விதமாக குறைந்த பட்ச கற்றல் ஏடுகள் அனைத்து பாடங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு ஏடுகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பள்ளி பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் கற்றல் ஏடுகளை தயாரித்து கொடுத்தார்.
கணினி ஆசிரியர் வெங்கடவருதன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
![Dinamalar iPaper Combo](https://stat.dinamalar.com/new/2022/images/ipaper/newspaper-ipaper-combo-detailf.jpg)