வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மாநில சட்டசபை தேர்தல்களில் நடந்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கார்கே, காங்.,எம்.பி ராகுல், காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில சட்டசபை தேர்தல்களில் நடந்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம். விரைவில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கான எங்கள் தயார்நிலை குறித்து பேசுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டினோம்.
தெலுங்கானாவைத் தவிர, ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன. அவை மீண்டும் நிகழாமல் இருக்க உறுதிபூண்டுள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லோக்சபா தேர்தல் வெகு தொலைவில் இல்லை, எங்களுக்கு அதிக நேரம் இல்லை. வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement