சென்னை,

பண மோசடி தொடர்பான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹசனில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ராஜேந்திர பாலாஜியை கைது செய்தது சட்ட நடவடிக்கையே. அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது, அவர் மீது தமிழக அரசுக்கு எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் தலைமறைவான பிறகே தனிப்படைகள் அமைத்து கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
 ராஜேந்திர பாலாஜி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *