சென்னை:
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி முதல்வருக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க அரசு முன்வர வேண்டும். மாவட்ட எல்லைகள் மறுசீரமைக்கப்படும் போது, பேரவைத் தொகுதிகள் மாவட்ட எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.