இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், “தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்ம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சிதான் கர்நாடக, கேரளாவில் நடக்கிறது. அப்படி இருந்தும் கேரளா அணை கட்ட முயற்சி மேற்கொள்வதையும், கர்நாடக தண்ணீர் வழங்க முடியாது என்று சொல்லும் போது திமுக-வினர் அமைதியாக இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே தி.மு.க அரசியல் செய்வது தெரியவருகிறது. இதுமட்டும் அல்ல பல தருணங்களில் தமிழ்நாட்டுக்கு எதிராக நடக்கும் செயல்களை அமைதியாக தி.மு.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கேடுகட்ட விடியாத தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என கொதித்தார்.

பாபு முருகவேல், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பாபு முருகவேல், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இறுதியாக தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “அணைகள் விவகாரத்தில் தமிழக அரசு போதுமான அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கும், கேரளா அரசுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். மற்றபடி கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்துவதை எதிர்க்கட்சிகள்தான் செய்ய வேண்டும். அதை அவர்கள் முறையாக செய்யாமல் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *