உயரதிகாரி : `நான் சொல்றத கேளு. நான் மனக் கஷ்டத்தில் இருக்கேன். உனக்கு ஒரு மனக் கஷ்டம் வந்தால், எனக்கு ஒரு மனக் கஷ்டம் இருக்கும் வரும் புரியுதா? எதாவது `பீஸ்’ இருந்தால் ரெடி பண்ணி கொடு. அமௌண்ட் எல்லாம்…
சந்திரன்: `ஃபிஷ்ஷா சார் ? ஃபிஷ்(மீன்) வேணுமா சார்’
உயரதிகாரி: `அப்போ நீ இரவு 10 மணிக்கு டூட்டிக்கு போகலையா. நீ வாட்ஸ்-அப் காலில் வா’ என்பதுடன்… அந்த ஆடியோ முடிவடைகிறது.
![புதுச்சேரி போலீஸ்](https://gumlet.vikatan.com/vikatan%2F2020-05%2F7f2f238c-9074-4e72-b040-144731e71ef9%2Fpolce.jpg?auto=format%2Ccompress)
சமூக ஊடகங்களில் இந்த ஆடியோ பரவியதையடுத்து சம்பந்தப்பட்ட உயரதிகாரி, சந்திரனிடம் சமாதானம் பேசியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரனின் மனைவி ஆர்த்தீஸ்வரி என்பவர் ஐ.ஆர்.பி.என் கமாண்டண்டரிடம் அளித்திருக்கும் புகாரில், `அந்த உயரதிகாரி என் கணவரிடம் பேசும்போது நானும் பக்கத்தில்தான் இருந்தேன். வாட்ஸ்அப் காலில் வந்தவர் அப்போது, `உனக்கு நான் எல்லாம் செய்து தருகிறேன். என் மனைவி வீட்டில் இல்லை. அதனால் என் வீட்டிற்கு எதாவது ஒரு பெண்ணை அனுப்பிவை” என்று சொன்னார். அதையடுத்து என் கணவர் புகார் கொடுக்க தயாரானபோது, புகார் கொடுக்கக் கூடாது என்று நான் நடத்தும் மளிகைக் கடைக்கு வந்து மிரட்டும் தொனியில் பேசினார்கள். அதனால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88