முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!
தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோர் குடும்பத்துடன் கேளம்பாக்கம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். ராஜேஷ் தாஸ், பணியிலிருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. இந்தச் சூழலில் ராஜேஷ் தாஸும் பீலா வெங்கடேசனும் பிரிந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் எனவும் அவர் மாற்றிக் கொண்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/a9bfff36-8641-4720-8fff-bf51bee0b451/14b1a676_a2d6_44f8_bd00_0bfc417f4add.jpg)
இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீது புதிதாக பழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 18-ம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பெயரில் அவர் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88