“தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுகிறார்களே…” என்ற கேள்விக்கு “அதற்கு கிஞ்சிற்றும் இடமில்லை” என்றவர்,
“எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அதிமுக-வை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.
இரட்டை இலை, தலைமைக் கழகம், இரண்டரைக் கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக செயலாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ராஜதந்திரியாக பணியாற்றி வருகிறார்.
![எடப்பாடி பழனிசாமி](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2Fc692b519-ceb7-4e64-bc34-0569efaac473%2F664c1b2630d3e.jpg?auto=format%2Ccompress)
மற்றவர்களைப்போல அல்லாமல் அதிமுகவை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக்கொண்டுள்ளார், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை காக்க பணியாற்றி வருகிறார்,
அதிமுகவில் தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக அல்ல, அதிமுக-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதிமுக-வில் தகுதி அறிந்து திறமை அறிந்து பதவி கொடுக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி” என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88