ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இது போன்ற அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. இதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் வேறு வழியில்லாமல் போலீஸார் உதவியுடன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், ஜாட் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் பா.ஜ.க வேட்பாளர்களை உள்ளே விடும் விவகாரத்தில் கிராம மக்கள் சமரசம் செய்து கொள்ள மறுக்கின்றனர். செளதாலா குடும்பத்தினரைக்கூட உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். கடந்த வாரம் ஹிசார் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றுக்கு சவுதாலாவின் மகன் அஜய் சிங் தனது மனைவி நைனா சவுதாலா மற்றும் மகனுடன் சென்ற போது அவர்களை உள்ளே விட மறுத்துவிட்டனர்.

பூபிந்தர் சிங் ஹோடா

பூபிந்தர் சிங் ஹோடா

முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹோடா விவசாயிகளை தூண்டிவிட்டு பா.ஜ.க வேட்பாளர்களை கிராமத்திற்குள் அனுமதிக்க மறுப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது.

இது குறித்து பூபிந்தர் சிங் ஹோடா கூறுகையில், ”மக்கள் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருக்கின்றனர். விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க பா.ஜ.க தவறிவிட்டது. ஹரியானாவை பா.ஜ.க பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. ஹரியானாவில் தான் நாட்டிலேயே அதிக பட்சமாக வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது” என்றார்.

ஹரியானா மட்டுமல்லாது பஞ்சாப்பில் இதைவிட நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *