ஆனால் இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்னும் பொது களத்தில் வெளிவரவில்லை. உண்மையில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி ஒரு கொள்ளை கமிட்டி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,“தோல்வியை உணர்ந்து, பா.ஜ.க அரசு இ.வி.எம் மூலம் ஜனநாயகத்தை கொள்ளையடிக்க விரும்புகிறது. அதிகார அழுத்தத்தின் கீழ் அரசு அதிகாரிகள் தங்கள் அரசியலமைப்புப் பொறுப்பை மறந்துவிடக் கூடாது. இல்லையெனில், இந்திய கூட்டணி அரசு அமைந்த பிறகு, அரசியலமைப்பின் பிரமாணத்தை அவமதிக்கும் முன் எவரும் 10 முறை யோசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இனியாவது தேர்தல் ஆணையம் விழித்துகொள்ளட்டும்.” எனத் எச்சரித்திருக்கிறார்.

இதனிடையே, அந்த வீடியோ தொடர்பாக, சிறுவனின் தந்தை அனில் சிங் தாக்கூர் பேசுகையில், “எனது மகனுக்கு 16 வயது. ராஜன் சிங் தாக்கூர் இயந்திரத்தை சோதிக்கும் போது வாக்களித்த வீடியோ அது. ஆனால், அது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது” என்றும், மற்றொரு பேட்டியில், `கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவும் விதமாக வாக்களித்தார்” என்றுக் குறிப்பிடுகிறார்.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதியில் 2.2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது.

இதே போன்ற முறைகேடான வாக்குபதிவு, குஜராத் மாநிலம் தாஹோத் தொகுதியின் பிரதம்புரா பகுதியில் நடைபெற்றது. இரண்டு பா.ஜ.க உறுப்பினர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலானது. அதைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறை அந்த இருவரையும் கைது செய்தது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *