தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிபயங்கர நிலநடுக்கம் காரணமாக தைவானில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு பல்வேறு பகுதிகள் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/68f7e8c5-f7f8-49a9-8fa0-cd6edea47061/AP24094042463306.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/ca295e3f-d285-497e-a4a0-13ce4317d1c2/AP24094042460093.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/f749d78a-7d98-4512-8332-26944f3bb040/AP24094048399732.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/3c6040c8-e5bf-48d5-900a-1763e4dee891/AP24094048188828.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/7f9a609d-9a0d-4c4a-b59c-bbb234f5d8ea/AP24094048180240.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/12011783-3719-43ea-a872-f2de72176cfe/AP24094042465771.jpg)
இதனிடையே பூமிக்கடியில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் பல தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருசில தீவுகளில் பெரும் அலைகளை கரையை தாக்க தொடங்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 4 நாள்கள் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி!
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள தமிழ்நாட்டில் தேர்தல் ஃபீவர் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வரவுள்ளார்.
வரும் 9-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, மாலை 4 மணி அளவில் வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். ரோடு ஷோவாக இந்த பிரசாரம் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிக்கவுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/38f616fe-2d7e-422a-806c-ba5b91e9ff5d/WhatsApp_Image_2024_04_03_at_04_34_24.jpeg)
அதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 10-ம் தேதி காலையில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, நீலகிரியில் ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
பின்னர் 13-ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பெரம்பலூரில் பொதுக்கூட்டத்திலும் அதற்கு அடுத்த நாள் விருதுநகர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY