புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கள ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில், வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த சிறப்பு முகாம் ஒரு மாதம் நடந்தது. இந்த முகாமில் பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள சமர்ப்பித்துள்ள படிவங்களை சரி பார்த்து, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி முத்தம்மா, இரண்டாம் கட்டமாக புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் ஆகிய தொகுதிகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய வேண்டி பெறப்பட்ட படிவங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், கள ஆய்வுக்கு பின், மங்கலம், வில்லியனுார் , உழவர்கரை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்துக்கும், உப்பளம், காமராஜ் நகர், ராஜ்பவன் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெறப்பட்ட அனைத்து படிவங்களையும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்குமாறு, அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கும் முத்தம்மா உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *