புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரின் மதிப்பை குறைக்க கவர்னர் தமிழிசை போட்டி அரசாங்கம் நடத்துக்கின்றார் என அ.தி.மு.க.,பொதுச்செயலர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்

இது குறித்து அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் மதிப்பை குறைப்பதும், அந்த கட்சிகளை உடைத்து அரசியல் ஆதாயம் பெறுவதும், பா.ஜ.,வின் செயல்பாடாக உள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி மதிப்பை குறைத்து, அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., மற்றும் கவர்னரின் செயல்பாடுகள் உள்ளன.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி ஆட்சி இருந்தாலும், கவர்னர் தலைமையில் பா.ஜ., போட்டி அரசாங்கம் நடத்துகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு உயரதிகாரிகள் முட்டுகட்டை போடுகின்றனர் என முதல்வர் குற்றம்சாட்டுகின்றார்.

தலைமை செயலர், உயரதிகாரிகள் துணையோடு பா.ஜ., முதல்வருக்கு மன உளைச்சலை கொடுக்கின்றது. கவர்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி தனது கூட்டணி ஆட்சியில் இருந்து பா.ஜ.,வை வெளியேற்ற வேண்டும். எந்தெந்த திட்டத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என முதல்வர் இன்னும் வெளிப்படையாக பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *