வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து ராகுலின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல என டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.,22ம் தேதி ராஜஸ்தானின் பார்மேர் மாவட்டம், பய்டோ பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் கட்சியின் காங்., எம்.பி ராகுல் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பா.ஜ., வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது குறித்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதிகள்‛‛ பிரதமர் மோடி குறித்து ராகுலின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல. ராகுல் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement