இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 12) ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா 2023, மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்களே இல்லாத சூழலில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் ஆணையம்

ஏற்கெனவே, தேர்தல் ஆணையர்களை மத்திய அமைச்சரவைக் குழு முடிவுசெய்வதால், ஆட்சியிலிருக்கும் அரசு தங்களுக்குச் சாதகமான நபர்களைத் தேர்தல் ஆணையராக நியமிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, இதனை உச்ச நீதிமன்றத்துக்கு வழக்காகக் கொண்டுசென்றன. பின்னர் உச்ச நீதிமன்றமும், `பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரைக்கும் நபர்களைத் தேர்தல் ஆணையர்களாகக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தது.

அர்ஜுன் ராம் மேக்வால் - மத்திய சட்ட அமைச்சர்

அர்ஜுன் ராம் மேக்வால் – மத்திய சட்ட அமைச்சர்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *