புதுச்சேரி-உப்பளம் தொகுதி, வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தில் தற்போது பேச்சியம்மன் உருவப் பொம்மை அமைக்கும் பணி நடந்தது. இதனை தனியார் ஒருவர் என்னுடைய இடம் என்று கூறி கோவில் பணிகளை தடுத்து நிறுத்தினார்.

இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.

இடத்திற்கு உரிமை கொண்டாடுபவரிடம் ஊர் மக்களின் தெய்வவழி பாட்டில் எந்த தடையும் பிரச்னையும் வரக்கூடாது என்றும் கோவிலுக்கே அந்த இடத்தை தந்து விடு மாறும் முதல்வரிடம் இந்த பிரச்னையை கூறி தங்களுக்கு இடத்திற்கு உண்டான தொகையினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று இடத்தின் உரிமையாளர் சம்மதம் தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்களின் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *