சேலம்;

சேலம் மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டினத்தில் சாம்பல் ஏற்றிச் செல்லும் பல்கர் லாரியை ஒட்டி வந்த டிரைவர் கட்டு பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டிற்குள் புகுத்தால், வீட்டிற்குள்ளே நிறுத்து வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தது‌. இதுகுறித்து கருமலைக் கூடல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டியைச் சேர்ந்த டேங்கர் டிரைவர் வீரமணி (39).இவர் மேட்டூரில் இருந்து காலி டேங்கர் லாரியை ஆந்திராவுக்கு சாம்பல் பாரம் ஏற்ற ஒட்டிச் சென்றுள்ளார்.அப்போது மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டணத்தில் கட்டுப்பாட்டை இழந்து,அண்ணா நகரில் மின்கம்பம் மற்றும் ஈஸ்வரன்(70) என்பவரது வீட்டிற்குள் புகுந்தது.


இந்த விபத்தால் ஏற்பட்ட பலத்த சப்தம் கேட்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
லாரி ,ஈஸ்வரன்(70) வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி சுசிகி கார்,பொலிரோ ஜீப், மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் மோதியது. இதில் வாகனங்கள் சேதமடைந்தது.மேலும் டிரைவர் வீரமணி லேசான காயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து கருமலைக் கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *