விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நாராணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்-மாரீஸ்வரி தம்பதியினர், அச்சக தெழிலாளர்கள். இந்த தம்பதியரின் மகன் இந்திரக்குமார் (வயது 23). வெளிநாட்டு வேலைக்கு சென்ற இந்திரகுமார், பணி வழங்கும் நிறுவனத்தினால் வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்திரக்குமாரை மீட்டு தாயகம் அழைத்து வர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உதவ வேண்டும் என இந்த தம்பதியினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து அவர்கள் நம்மிடம் பேசுகையில், “எங்களது மகன் விசுவல் கம்யூனிகேசன் பட்டமேற்படிப்பு படித்து முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஏஜென்ட் மூலமாக தாய்லாந்து நாட்டில் வேலை இருப்பதாக சொல்லி அழைப்பு வந்தது. தாய்லாந்து நாட்டில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி செய்வதற்கு எனது மகனின் கல்வித் தகுதி சரியானது எனக் கூறினார்கள். தொடர்ந்து விமான டிக்கெட் செலவை மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று வேலையில் சேர்ந்ததும் டிக்கெட் செலவுக்கான பணத்தையும் கம்பெனி நிர்வாகம் திருப்பி தந்துவிடும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் ரூ.50 ஆயிரம் செலவுசெய்து விமான டிக்கெட் எடுத்து மகன் இந்திரக்குமாரை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தோம்.

இந்திரக்குமார்

அங்கு சென்று ஏஜென்டை சந்தித்தப் பிறகு தாய்லாந்தில் இருந்து லாவோஸ் நகருக்கு அடுத்து உள்ள தீவுக்கு எனது மகனை வேலைக்காக அழைத்துச் சென்றதாக தகவல் தெரியவந்தது. கடந்த 14.3.2024 அன்று தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக சென்றதிலிருந்து கடந்த இரண்டரை மாதங்களாக எனது மகனுக்கு சரியான சாப்பாடு தராமல் கம்பெனி நிர்வாகத்தினர் வேலை வாங்கி உள்ளனர். அதுபோல் பணிக்கான ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. கைச்செலவுக்கு வைத்திருந்த பணமும் காலியாகிவிட்ட நிலையில் கம்பெனி நிர்வாகத்திடம் சம்பளம் கேட்டுள்ளான். ஆனால் கம்பெனி நிர்வாகத்தினர் எனது மகனுக்கு சம்பளம் தர மறுத்திருக்கின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட ஆத்திரத்தில் கம்பெனி நிர்வாகம் எனது மகனை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். தொடர்ந்து கம்பெனி நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தியதால் ஊர் திரும்பி வருவதற்காக கம்பெனி நிர்வாகத்திடம் எனது மகன் பாஸ்போர்ட் கேட்டிருக்கிறான். ஆனால் 27 ஆயிரம் ரூபாயை தந்தால் மட்டுமே பாஸ்போர்ட் திருப்பி தர முடியும் எனக்கூறி அவர்கள் மிரட்டியுள்ளனர்.

மனு

கைச்செலவுக்கு பணம் இல்லாமலும், சரியான உணவு இல்லாமலும் வெளிநாட்டில் துன்பப்படும் எங்கள் மகனிடம் காசுக் கேட்டு மிரட்டி அங்குள்ளவர்கள் கொடுமைப்படுத்துகின்றனர். எங்கள் மகன் பணம் பறிக்கும் கும்பலிடம் மாட்டிக் கொண்டானோ என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவனை அழைத்துச் சென்ற ஏஜென்டும், தாய்லாந்தில் வேலை இருப்பதாக சொன்னவரும் எங்களது அழைப்பை ஏற்று பேச மறுக்கின்றனர். நாளுக்குநாள் நிலைமை மோசம் அடைந்து கொண்டே செல்வதால் எனது மகனை உயிரோடு பார்க்கமுடியுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த விஷயத்தில் சீரிய கவனம் செலுத்தி தாய்லாந்து நாட்டில் சிக்கித் தவிக்கும் எனது மகனை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *