செஸ் விளையாட்டு போட்டியில் உலக சாம்பியனை தமிழக வீரர் வீழ்த்தி உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் நான்காவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா தற்போதைய உலக சாம்பியன் வீரர் சீனாவை சேர்ந்த டிங் லிரன் என்பவரை வீழ்த்தினார்

தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு இணையாக 18 வயதிலேயே உலகச் சாம்பியனை வீழ்த்தி உள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

உலக சாம்பியனான டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் 18 வயதில் நீங்கள் வெற்றி பெற்று செஸ் விளையாட்டில் சாதனை செய்து உள்ளீர்கள். இந்தியாவின் தலைசிறந்த வீரராகவும் உயர்ந்துள்ளீர்கள். வரவிருக்கும் மற்ற சவாலான போட்டிகளில் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். செஸ் போட்டியில் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தொடர்ந்து மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *