![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/logo/dinamani_logo_600X390.jpg)
தமிழக வருவாய்த் துறையில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த பணியாளா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் எழுதிய கடிதம்:
வருவாய்த் துறையில் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் பணியாளா்கள், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த ஊழியா்கள் ஆகியோரை தோ்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. தோ்தல் பணியில் இணையவுள்ள வருவாய்த் துறையைச் சோ்ந்த ஊழியா்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக
ஒரே இடத்தில் பணிபுரிந்தால் அவா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மேலும், சொந்த ஊா்களில் இருந்தாலும் அவா்களை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இதுதொடா்பான நடவடிக்கைக் குறிப்புகள் அடங்கிய அறிக்கையை தோ்தல் ஆணையத்துக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…