பதவி பறிப்பு வழக்குகளில் சட்டமன்றத்தில் எந்தக்குழு பெரும்பான்மை பெற்றுள்ளது என்பதை பார்த்து கண்மூடித்தனமாக சபாநாயகர்கள் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பு சுபாஷ் தேசாய் வழக்கில் கூறியிருந்ததை உத்தவ் தாக்கரே தரப்பில் சுட்டிக்காட்டி இருந்தனர். இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ள போதிலும் சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி சபாநாயகர் உண்மையான சிவசேனா எது என்று முடிவு செய்துள்ளார். சட்டமன்ற கட்சி மற்றும் அரசியல் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை உச்ச நீதிமன்றம் தெளிவாக வகுத்துள்ளது.
![உச்ச நீதிமன்றம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-12%2Fb1dc955d-453d-4404-96b4-c17b6fdf76f3%2F657bf153a03ad.jpg?auto=format%2Ccompress)
அப்படி இருந்தும் யார் அரசியல் கட்சி என்பதை முடிவு செய்ய சட்டமன்ற பெரும்பான்மையை சபாநாயகர் அளவு கோலாக கருதி தவறு செய்துள்ளார். எனவே சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
இதற்கிடையே உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டு இருந்த மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே அணியின் கொறடா பரத் கோகாவாலா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY