![ஆளுநர் ஆா்.என்.ரவி rnravi](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/12/21/original/rnravi.jpg)
ஆளுநர் ஆா்.என்.ரவி
ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாக விளங்குபவா் திருவள்ளுவா் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டினாா்.
திருவள்ளுா் தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட காவி நிறத்துடன் கூடிய உருவப்படத்துக்கு ஆளுநா் ஆா். என்.ரவி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
திருவள்ளுவா் தினத்தில் ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சநாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.
இந்தப் புனிதமான நாளில், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…