setc

 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்கு அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழகங்கள் சாா்பில் ஜன.12-ஆம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் வெள்ளிக்கிழமை 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்தனா். சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50,000 போ் சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா். அதன்படி, கடந்த 2 நாள்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் போ் சொந்த ஊா் சென்றுள்ளனா். மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாகவும், 2.30 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனா்

இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் 6 இடங்களில் இருந்து முன்பதிவு செய்யப்படாத சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகின்றன.

மேலும், தென் தமிழக பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, நாகா்கோவில், திருச்செந்தூருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவில்லாத பேருந்துகளாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *