பொங்கல் திருவிழாவைக் கொண்டாடப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. 3 கி.மீ. தொலைவிற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
படிக்க: புழல் ரசாயன கிடங்கில் தீ: போராடி அணைத்த தீயணைப்புதுறை!
போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…