அடுத்தகட்ட நகர்வு குறித்து நம்மிடம் போனில் பேசிய செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், ‘‘மிகுந்த மனதைரியத்துடன் வெளியில் வந்திருக்கிறேன். சிறைக்குச் செல்லும் முன்பு எப்படியிருந்தேனோ… அதைவிட பலமடங்கு மக்களுடன் இணைந்துப் போராட்டக்களத்தில் நிற்கப் போகிறேன். சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே அரசு கைவிட வேண்டும். எ.வ.வேலு சுயரூபத்தைக் காட்டிவிட்டார். மாவட்ட ஆட்சியரைத் தி.மு.க மாவட்ட துணைச்செயலாளரைப்போல வைத்துக்கொண்டும்… எஸ்.பி-யை கூலிப்படை தலைவராகவும் இயக்கியிருக்கிறார். வேளாண்குடி மக்களை தொடர்ந்து பயமுறுத்தக்கூடிய வேலையை மட்டுமே போலீஸ் செய்துகொண்டிருந்தது. ஏதாவது என்றால்… ஆயிரம் போலீஸாரை ஊருக்குள் இறக்குகிறார்கள். சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்ததே காவல்துறைதான்.
![அமைச்சர் எ.வ.வேலு](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-01%2Fd6def2ee-e3c9-405a-995a-032f0a73194e%2F6055173964dc6.avif?auto=format%2Ccompress)
எங்களால், துளியளவுகூட சமூக அமைதி சீர்குலையவில்லை. பயங்கரவாத இயக்கங்கள்தான் மக்களை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டு கோரிக்கை வைக்கும். அதுபோல, விவசாயிகள்மீது குண்டாஸ் போட்டுவிட்டு வீட்டில் இருக்கிற மனைவி, குழந்தைகளை அழைத்துசென்று காலில் விழ வைத்து, ‘அருள்தான் பண்ண வைத்தார்’ என்றும் அமைச்சர் சொல்ல வைத்திருக்கிறார். ‘சூத்ரதாரி’ அமைச்சர் எ.வ.வேலு மட்டும்தான். சிப்காட் கொண்டுவந்தால், கான்டிராக்ட் பணிகள் கிடைக்கும். அங்கு வரும் கம்பெனிகளால் நன்கொடை கிடைக்கும் என்பதுதான் அவரின் திட்டமும்கூட. எ.வ.வேலுவை விவாதத்துக்கு வரச்சொல்லுங்கள். நான் பேசவில்லை. படிக்காத, இயல்பான பாமர விவசாயி ஒருவரோடு அவர் விவாதம் செய்யட்டும். அவருக்கு விவசாயிகளின் வலித் தெரியாது. என் மீதான குண்டாஸ் உடைந்ததற்கு முதலமைச்சரின் பரிந்துரை என்று சொல்வதே தவறு. நீதிமன்றம் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டதால், நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறார்கள்’’ என்றார் கொதிப்போடு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.