புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் நடந்த சாரண, சாரணியர் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி, ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் சாரண, சாரணியர் இரண்டு நாள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், சாரண, சாரணியர்கள் ஊர்வலமாக வில்லியனுார் பள்ளியில் இருந்து திருக்காஞ்சி சென்று, கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில், துப்புரவு பணியில் ஈடுபட்டு, மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில், பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்ட்டி அனுதா பூனமல்லி முன்னிலை வகித்தனர். சாரண, சாரணியர்களுக்கு முகாமில் பல்வேறு வகுப்புகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் முகாமில் பங்கேற்ற அனைத்து சாரண, சாரணியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அமைப்பு ஆணையர் சண்முகம், இணை செயலாளர் ராமலிங்கம், ஆதித்யா பள்ளி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆதித்யா சாரண, சாரணியர் முகாம் அமைப்பாளர்கள் ராஜா, குலோபின் ஆகியோர் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *