சண்டிகர்: வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பஞ்சாப் அமைச்சர் உள்பட எட்டு பேருக்கு கீழ் கோர்ட் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த்சிங் மான் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அமன் அரோரா, கடந்த 2008-ம் ஆண்டு இவரது உறவினர் ராஜீந்தர் தீபா என்பவரின் வீடு புகுந்து அத்துமீறி அவரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சண்படிகார் குருபீந்தர் ஜோஹால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது இன்று நடந்த விசாரணையில் நீதிபதி சுனம், அமைச்சர் அமன் அரோரா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் நிரூபணமானதையடுத்து இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் அறிவுறுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
![Dinamalar iPaper Combo](https://stat.dinamalar.com/new/2022/images/ipaper/newspaper-ipaper-combo-detailf.jpg)