வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதா லோக்சபாவில் இன்று (டிச.21) நிறைவேற்றப்பட்டது.

‘தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.மேலும், பார்லிமென்டில் சட்டம் இயற்றப்படும் வரை, இந்த விதிமுறை தொடரும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து, தேர்தல் ஆணையர்கள் நியமன சட்ட திருத்த மசோதா 2023ஐ மத்திய அரசு இயற்றியது. இதையடுத்து இந்த மசோதா, ராஜ்யசபாவில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப் பட்டது. அதை தொடர்ந்து லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. குரல் ஓட்டெடுப் பின் வாயிலாக இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *