புதுச்சேரி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, புதுச்சேரி பா.ஜ., தலைவர் சந்தித்து பேசினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக புதுச்சேரி பா.ஜ., தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான செல்வகணபதி டில்லி சென்றுள்ளார்.
அங்கு முகாமிட்டுள்ள அவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கி கூறினார். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கூடுதலாக நிதியுதவி வழங்க வேண்டும் எனவும், மத்திய அமைச்சரிடம் செல்வகணபதி கோரிக்கை வைத்தார்.
மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் முருகன் உடனிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
![Dinamalar iPaper Combo](https://stat.dinamalar.com/new/2022/images/ipaper/newspaper-ipaper-combo-detailf.jpg)