சேலம் / ஈரோடு / நாமக்கல் / ஓசூர் / தருமபுரி: சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, ஓசூர், தருமபுரியில் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 99-வது ஆண்டு தொடக்க விழா, வள்ளலாரின் 201-வது ஜெயந்தி விழா, சத்ரபதி சிவாஜி முடிசூடிய 350-வது ஆண்டு விழாவை ஒட்டி, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. சேலத்தில் நடந்த ஊர்வலத்துக்கு மாவட்டத் தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மரவனேரி மாதவம் வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், அம்பேத்கர் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்ச்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்தை வந்தடைந்தது.