இதற்கு முன்பு, இயற்றப்பட்ட இறைச்சி நுகர்வு தடுப்பு மசோதாக்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பு, விவசாயிகள், உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலைகளால் தோல்வியடைந்தன. அதோடு, நாய் இறைச்சி உண்ணும் இந்த பழம்பெரும் வழக்கம், கோடை வெப்பத்தை வெல்வதற்கான வழியாகவும் கருதப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது இந்த நடைமுறை பெரும்பான்மையாகக் குறைந்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமே இன்னமும் நாய் இறைச்சி உண்பதாகவும், சிறிய உணவகங்களில் மட்டுமே அவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென் கொரியாவில் இப்போதைக்கு, சுமார் 1,150 நாய் வளர்ப்புப் பண்ணைகள், 34 இறைச்சிக் கூடங்கள், 219 விநியோக நிறுவனங்கள், சுமார் 1,600 நாய் இறைச்சி உபயோகிக்கும் உணவகங்கள் இயங்கி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்து ஆண்டு நடத்தப்பட்ட Gallup Korea கணக்கெடுப்பின்படி 64 சதவிகிதம் பேர் நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டில் எட்டு சதவிகிதம் பேர் மட்டுமே நாய் இறைச்சி உட்கொண்டதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இது, 2015-ல் 27 சதவிகிதத்திலிருந்து இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது.