மக்களின் ஆதரவின்றி அது சாத்தியமில்லை. நம்முடைய கலாசாரத்திலுள்ள அனைத்து நல்ல விஷயங்கள் மீதும் இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. உலகிலுள்ள நல்ல விஷயங்களை அழிக்க இடதுசாரிகள், மார்க்சிய கலாசாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து உலகை விடுவிக்கும் பொறுப்பு பாரதத்தின் மீது இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இடதுசாரிகள், நல்ல விஷயங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அழிவைத் தொடங்கினர். விவாதம் என்ற பெயரில் அவர்களின் நிலைப்பாட்டால் சமூகம் தவித்து வருகிறது.

இந்த நெருக்கடி இப்போது இந்தியாவிலும் இருக்கிறது. இந்திய சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இடதுசாரிகள் இந்துக்களுக்கோ அல்லது சனாதனத்துக்கோ மட்டுமே எதிரானவர்கள் அல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் எதிரானவர்கள். அவர்கள் தங்களை சக்திவாய்ந்தவர்கள் என்றும், கடவுள்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். தங்களை விஞ்ஞானிகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியில்லை. எனவே, இடதுசாரிகள் உருவாக்கிய குழப்பத்தைக் களைய வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY