சென்னை: இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கடந்த 15-ம் தேதி முதல், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மாதாமாதம் ஒரு கோடிக்கும் கூடுதலான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பது அவர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நம்பிக்கையை, நிம்மதியை ஏற்படுத்தும்.
ஆனால், வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லை, குறுஞ்செய்திக் கட்டணம் ஆகிய காரணங்களுக்காக, கணிசமான எண்ணிக்கையிலான பெண்களின் கணக்குகளிலிருந்து அவர்களுக்குச் சேர வேண்டிய ஆயிரம் ரூபாயில் பெரும்பாலான தொகையோ, முழுவதுமோ அபராதத் தொகையாக பிடித்தம் செய்துள்ளன என்று தெரியவருகிறது.