தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு 2,500 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற 240 அறிவிப்புகள் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கடந்த வேளாண்துறை நிதிநிலை அறிக்கையில், நான்கு புதிய வேளாண் கல்லூரிகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
வாழை மற்றும் எலுமிச்சைப்பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பதற்கான மையங்கள் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அவற்றை கவனத்தில்கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படும். மலைப்பகுதிகளுக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். வேளாண் பயிர்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த வனத்துறை அமைச்சருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் சரவணன், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வேளாண்மை ஆணையர் சமயமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.