இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி!
உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவிலும் முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் கூடுதலாக, கோர்பிவேக்ஸ் , கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் கொரோனா சிகிச்சைக்கான மால்நுபிரவிர் என்னும் மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அவசர தேவைகளின் அடிப்படையில் வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை 13 நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *