குற்றமே தண்டனையாக இறுதிக் காட்சிகளில் படத்தின் ஒட்டுமொத்த கருத்தினையும் தாங்கி நிற்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர், மிக நேர்த்தியான நடிப்பை வழங்கி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார். (யார் அது என்பதே சஸ்பேன்ஸ்!) கொலை செய்யப்பட்ட பெண்ணாக வரும் நிகிதாவின் நடிப்பில் குறையேதுமில்லை. அவரது அம்மாவாக நடித்துள்ள தீபா, அவரது காதலனாக வரும் நபரின் மீமிகை நடிப்பு படத்தின் பெரிய மைனஸ். இருவரும் பச்சாதாப உணர்வை ஏற்படுத்தாமல் எரிச்சலை மட்டுமே தருகிறார்கள். கஜராஜ், கருப்பு நம்பியார், அழகர் ஆகியோர் தங்களின் குணச்சித்திர பாத்திரங்களுக்கான மீட்டரில் நடித்துள்ளார்கள்.
![ஒரு நொடி விமர்சனம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F505f1c8f-ee37-44c0-854c-5b6ac38450a7%2FGK98QDyacAAGUgO.jpg?auto=format%2Ccompress)
இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு த்ரில்லர் அனுபவத்தைத் தரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. ஆனால் அதற்காகத் திருப்பங்கள், அதற்கு அடுத்த திருப்பத்தில் மற்றொரு திருப்பம் என்றே நகர்வது, ஒரு சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. போகிற போக்கில் இதுவாக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று காட்சிகள் நகர, “இது சும்மா… இவன் இல்ல. இதுவா இருக்காது” என்று நாமே யூகிக்கும் வகையான காட்சிகளும் ஏராளம். காணாமல் போன நபரின் கதையில் தொடங்கி, சம்பந்தமே இல்லாமல் இளம்பெண் மரணத்தைக் காட்டிய விதத்திலேயே இருவழக்குகளுக்கும் தொடர்பு உண்டு என்ற ஸ்பாய்லரை நம்மிடம் நேரடியாகச் சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும் அந்த சஸ்பென்ஸ் உடையாமல் இறுதிவரை எடுத்துச்சென்ற இயக்குநருக்கு மணிவர்மனுக்குப் பாராட்டுகள்!